Wednesday, 14 September 2011

ஏமப்பேரூர்..

ஏமப்பேரூர்...

ஏமப்பேரூர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது 63  நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள்.அவர் பிறந்த ஊர் தான் திருஏமப்பேரூர்.
இந்த ஊரின் தற்போதைய பெயர் திருநெய்பேர் .

திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் சென்றால் இந்த ஊரை அடையலாம்.இந்த சாலை பயணம் செய்ய வசதியானது.செல்லும் வழியெல்லாம் அருமையான ஆலயங்கள்,வயல்வெளிகள்,நீர்நிலைகள்.
திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் சரியாக 8 கி.மீ தூரத்தில் உள்ளது.
சாலை ஓரத்திலே நாயன்மார் கோயிலும் அதற்கு எதிரில் சிவன் கோயிலும் உள்ளது.

தலச்சிறப்பு:

இறைவன் பெயர்: வன்மீகநாதர்
இறைவி பெயர்: உமா பரமேஸ்வரி

தேவார வைப்பு தலம்.  அப்பர் பெருமான் பாடல் - 1

நமிநந்தி அடிகள் வரலாறு:

நமிநந்தி அடிகள் அந்தணர் குளத்தில் பிறந்தவர். திருவாரூர் கோவிலில் விளக்கேற்ற சென்றார்.கோவில் அருகே உள்ள வீட்டில் சென்று விளக்கு எரிக்க எண்ணெய் கேட்டார். அங்கே இருந்த சமணர்கள் அவரை கேலி செய்து தண்ணீரால் விளக்கேற்ற கூறினார். நமிநந்தி அடிகள் நீரால் விளக்கு ஏற்றினார்.சமணர்கள் சைவ சமயத்தின் பெருமை உணர்ந்து  சைவத்தை தழுவினர்.திருவாரூர் கோவிலில் நடைபெற்ற விழாவில் பல தரப்பு மக்களும் வருவர். இவர்களால் தீண்ட பெற்ற நமி நந்தி அடிகள் தன வீட்டுக்குள் வராமல் நீராட சென்றார். நீராட வருவதற்கு முன்னர் தூங்கி விட்டார். கனவில் தோன்றிய சிவ பெருமான் திருவாரூரில் உள்ள அனைவரும் தன் பூத கணங்கள் என்று கட்டினர். தவறை திருத்தி கொண்டார் நமிநந்தியடிகள்.அடியவர்களின் கலீல் விழுந்து மன்னிப்பு கோரினார்.இப்படி போகிறது இவர் வரலாறு. 

இவருடைய குருபூஜை வைகாசி பூரம்.

ஆலயம்:

மிகவும் சிறிய ஆலயம். கோபுரம் கிடையாது. முகப்பு வாயில் மட்டுமே.நாங்கள் சென்ற சமயம் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டு உள்ளது.

அதலால் பிரகார வலம் வர முடியவில்லை. அர்ச்சகரை கேட்டோம். பிரகாரத்தில் விநாயகர்,முருகன்,சனீஸ்வரர் சன்னதிகள் உள்ளதாக கூறினார்.

கோவிலில் நுழைந்த உடன் இடப்பக்கம் நமிநந்தி அடிகள் உருவம் உள்ளது.

அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் உள்ளது. சுவாமி நீண்ட பணம்.தனி சன்னதி.சுவாமி மற்றும் அம்மன் சன்னதி ஒரே கட்டடத்தில் உள்ளது.

குறிப்புக்கள்:

அ. ஊர் மிகவும் சிறியது. சன்னதி தெருவில் மூன்று வீடுகள் மட்டுமே.கோவிலில் மிகவும் பழையது. பூஜைகள் சரிவர நடப்பது இல்லை.கூட்டமும் கிடையாது.கோவில் குளமும் பயன்படுத்தும் நிலையில் இல்லை.

ஆ.குடமுழுக்கு எப்ப்போது என்று தெரியவில்லை.திருவாரூர் கோவிலோடு இணைந்தது.

அர்ச்சகர் எண்:

ராஜேந்திர சிவாச்சாரியார்.
அலைபேசி எண்: 9444541508


புகைப்படங்கள்:
                                                          நமிநந்தி அடிகள்



குளம் தான்...கிரவுண்டு அல்ல...


முகப்பு.. 







Sunday, 4 September 2011

பெரும்புலியூர் புகைப்படங்கள்


ராஜகோபுரம் 


நால்வர் 


இவர் யார்????


கமல பீடம் 


அம்பாள் சன்னதி 






கமல பீடம் 


கேள்விக்கு பதில்..... அக்னி தேவன் ...

பெரும்புலியூர்

பெரும்புலியூர் ...

வித்தியாசமான அனுபவம். எங்கள் பயணத்தில் இந்த தலம் இடம் பெற வில்லை. சப்தஸ்தானம் வரிசையில் தில்லைஸ்தானம் ஆலயத்தை பார்த்து விட்டு அங்கேயே அமர்ந்து கொண்டோம். தில்லைஸ்தானம் அர்ச்சகரிடம் பேச்சு கொடுத்தோம்,சுற்றுப்புற ஆலயங்களை பற்றி. பேச்சின் ஊடே அவரே கூறினார்.தான் பெரும்புலியூர் ஆலய அர்ச்சகர் என்று.

நாங்கள் வந்த காரணங்களை கேட்டு கொண்டார்.பிறகு எங்களுடன் வர சம்மதித்தார்.

வழி: 

தில்லைஸ்தானம் ஆலயத்தில் இருந்து இங்கு செல்லலாம்.சரியான வழி கிடையாது.மிகவும் சிறிய கிராமம்.திருவையாறு கல்லணை திருக்காட்டுப்பள்ளி சாலை தில்லைஸ்தானதிற்கு வலப்புறம் பிரியும் சாலையில் 4 கி.மீ தூரத்தில் பெரும்புலியூர்.

ஊர் சிறப்பு: 

சுந்தரராஜ பெருமாள் ஆலயம் புகழ் பெற்றது. சிவாலயத்திற்கு கூட்டம் இல்லை.

தல சிறப்பு

இறைவன் பெயர்: வியாக்ரபுரீஸ்வரர்
இறைவி பெயர்: சௌந்தர நாயகி 

ஞானசம்பந்தர் - 1 பாடல்.

பெரிய கோயில் விமானம்,ஆவுடையர்கோயில் கொடுங்கை வரிசையில் பெரும்புலியூர் கமல பீடமும் ஒன்று. ஆனால் பெரும்புலியூர் ஒரு சிறு கிராமமாக உள்ளதால் கூட்டம் இல்லை

தல வரலாறு: 

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிபட்ட தலம். வியாக்ரபாதர் வழிபட்ட
ஏனய தலங்கள் சிதம்பரம்,ஓமாம் புலியூர், எருக்கம் புலியூர் ஆகும்.சிவபெருமானை வழிபட்டு புலி கால்களை பெற்றார்.வியக்ரம் என்றால் வடமொழியில் புலி என்று பொருள். நடராஜ பெருமானுக்கு இரு பக்கமும் இருப்பவர்கள் வியாக்ராபாதரும், பதஞ்சலி முனிவரும். 

வேறு தகவல் ஏதும் பெற முடியவில்லை.

குறிப்புகள்: 


அ. ஆலயம் ஒரு சிறு கிராமத்தில் அமைந்து உள்ளது. ஆலயத்திற்கு அருகில் வீடுகள் மற்றும் கடைகள் இல்லை.பேருந்து வசதி கிடையாது.

ஆ. ஆலய அர்ச்சகர் சதாசிவ குருக்கள் தில்லைஸ்தானம் ஆலயத்திற்கு அருகில் உள்ளார். தரிசனம் செய்ய வருபவர்கள் அவரை அழைத்து செல்ல வேண்டும்.


இ.     கோவிலில் கூட்டம் இல்லாததால் எல்லா நேரமும் கோவில் திறந்து இருக்காது. திருச்சி மலைகோட்டை தாயுமானவர் மன்றம் இக்கோயிலுக்கு குடமுழுக்கு செய்து உள்ளது.

ஈ. ஆகவே கோவிலுக்கு செல்பவர்கள் அர்ச்சகருக்கு முன்கூட்டியே சொல்லிவிட்டு செல்வது நல்லது.மேலும் எண்ணெய், திரி, பூ போன்றவற்றை எடுத்து செல்லவும்.

அர்ச்சகர் முகவரி:

சதாசிவ குருக்கள்,
அக்கிறஹாரம்,
தில்லைஸ்தானம் அஞ்சல்,
திருவையாறு (வழி),
தஞ்சை மாவட்டம்.