Wednesday 3 August 2011

மிளகனூரில் ஒரு நாள்....1

மிளகனூர்...

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் உள்ள ஒரு அழகான கிராமம் மிளகனூர். 2011ஜூன் மாதம் 19 ஆம் தேதி மிளகநூரில் நடந்த லக்ஷ்மி நாராயண பெருமாள் ஆலய குடமுழுக்கு  விழாவிற்கு நாங்கள் சென்று இருந்தோம்.எங்கள் குடும்ப நண்பர் மானாமதுரை  திரு.சத்யநாராயணன் அவர்களின் குடும்பம் இந்த விழாவை ஏற்பாடு செய்து இருந்தனர்.

19 ஆம் தேதி விடியற் காலையில் திருச்சியில் இருந்து கிளம்பி காரைக்குடி மானாமதுரை  வழியாக மிளகனூரை  அடைந்தோம்.
மிளகனூரில் உள்ள மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயத்தை மிகவும் அழகாக பராமரிக்கின்றனர். மீனாக்ஷி அம்மன் கனவில் வந்து உத்தரவு இட்ட படி இந்த ஆலயம் கட்டப்பட்டு உள்ளது.பரிவார தேவதைகளுடன் உள்ள அழகான ஆலயம். வருடந்தோறும் எல்லா பண்டிகைகளும்  இந்த ஆலயத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. 

இந்த ஆலயத்திற்கு அருகில் லக்ஷ்மி நாராயண பெருமாள் ஆலயம் புதிதாக  கட்டப்பட்டு உள்ளது.யாக சாலை பூஜைகள் 17 ஆம் தேதி ஆரம்பிக்கபட்டது. 
19 ஆம் தேதி காலையில் 10 -15 - 11 .௦௦ மணி அளவில் குடமுழுக்கு நடை பெற்றது.

என் பயணங்களில் குடமுழுக்கு விழாவை காண்பது இதுவே முதல் முறை.
அங்கே எடுத்த புகைபடங்கள் சில....

1. குடமுழுக்கு பத்திரிக்கை..


 லக்ஷ்மி நாராயண பெருமாள் ஆலயம்..

1 comment: