Wednesday 26 October 2011

தலைஞாயிறு





                                                                        கட்டுமலை 












நன்றி: கூகிள்

தலைஞாயிறு

தலைஞாயிறு.. 

வேறு பெயர்கள்: திருகருப்பறியலூர்,மேலைக்காழி ...இப்படி கேட்டால் யாருக்கும் தெரியாது. தலைஞாயிறு என்று சொன்னால் தான் தெரியும். 

ஆலயங்களில் இது கொகுடி கோயில்..
ஆலய அமைப்புகளில் பல வகைகள் உண்டு.தூங்கானை மாடம்,மாட கோயில்..

கொகுடி என்பது ஒரு வகை முல்லை.  இந்த வடிவில் அமைந்தது இந்த கோயில்.
சீர்காழிக்கு மேற்கில் இருப்பதால் இது மேலைக்காழி.

இருப்பிடம்: 

வைத்தீஸ்வரன்கோவில் - திருப்பனந்தாள் சாலையில் தலைஞாயிறு என்னும் கைகாட்டி உள்ள இடத்தில் செல்ல வேண்டும்.  தலைஞாயிறு சர்க்கரை ஆலை அருகில் உள்ள சாலையில் செல்ல வேண்டும். ஊர் இந்த ஆலைக்கு பின்புறம் உள்ளது. கோவில் ஊரின் நடுவே உள்ளது. ஆங்காங்கே வழி விசாரித்து செல்ல வேண்டும்.

இரண்டாவது வழி : மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில்  பட்டவர்த்தி என்னும் ஊரில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது.  


இறைவன் பெயர்: அபராத க்ஷமேஸ்வரர் , குற்றம் பொறுத்த நாதர். 
இறைவி பெயர்: கோல் வளை நாயகி , விசித்திர பாலாம்பிகா
தலமரம் : கொகுடி முல்லை 
தீர்த்தம்: இந்திர தீர்த்தம்
பாடல்: சம்பந்தர், சுந்தரர் 
தருமை ஆதீன திருக்கோயில்
தல அமைப்பு: 

மூன்று நிலை ராஜகோபுரம். கிழக்கு நோக்கிய சன்னதி . பிரகாரத்தில் சீர்காழி கோவில் போன்ற கட்டுமலை அமைப்பு உள்ளது. மிகவும் அபூர்வமான அமைப்பு. ஆனால் மிகவும் பாழடைந்து உள்ளது.திருப்பணி செய்ய வேண்டியது 
மிகவும் அவசியம்.

பிரகாரத்தில் தல விருட்சமான முல்லை செடி உள்ளது.கட்டுமலை கோவில் உள்ளே சென்றால் தோணியப்பர் சன்னதி உள்ளது. மர படியேறி மேல சென்றால் சட்டநாதர் சன்னதியை தரிசிக்கிலாம்.

தல வரலாறு:

இந்திரன் தன் வச்சிரஆயுதத்தை இறைவன் மேல் எறிந்ததால் ஏற்பட்ட பாவத்தை இங்கே போக்கி கொண்டான். இறைவன் இந்திரனின் குற்றத்தை பொருத்து அருளியதால் இவர் குற்றம் பொறுத்த நாதர். அனுமன் சிவா அபராதத்தை இங்கே வழிபாடு செய்து போக்கி கொண்டார்.இதே வரலாறு
திருகுரக்காவல் தலத்திற்கும் உண்டு.

மேலும் பல வரலாறுகள் இந்த தலத்திற்கு உண்டு.

ஆலயம் நேரம்:

காலை: 08 .00 - 12 .00 
மாலை: 06 .00  - 08 .00 

தொடர்புக்கு:
என். வெங்கடேச குருக்கள்
04364 - 203678 
94431  90169 


படங்கள் தனி பதிவில்:


  


Sunday 23 October 2011

நேமம்

நேமம்...

தேவார வைப்பு தலங்களில் ஒன்று நேமம். வைப்புத்தலம் என்றால்? திருமுறைகளில் தனிப்பாடல் பெறாமல் பிற தலங்களின் பாடல்களில் குறிப்பிட படுவது வைப்புத்தலங்கள். 

இருப்பிடம்

நேமம் திருக்காட்டுபள்ளி - தோகூர் - கல்லணை சாலையில் உள்ளது. திருக்காட்டுப்பள்ளியில் இருந்து 4 கி.மீ தூரத்தில் உள்ளது. சாலையின் ஓரத்தில் கோயில் உள்ளது. சாலை நல்ல தார் சாலை. காவிரி கரையில் 
தான் ஆலயம் உள்ளது. 


இறைவன் பெயர்: ஐராவதேஸ்வரர்
இறைவி பெயர் : அலங்காரி
தீர்த்தம் : சுதா கூபம் 

தல அமைப்பு:

சிறிய ஆலயம். சுவாமி கிழக்கு பார்த்தும் அம்பாள் தெற்கு பார்த்தும் உள்ளனர். இரண்டு அம்பாள் சன்னதிகள். இரண்டு அம்பாளுக்கும் ஒரே பெயர்.அம்பாள் சிலை திருட்டு போனதால் புதிய சிலை செய்யப்பட்டது. பின்பு பழைய சிலையும் கிடைத்ததால் இரண்டு சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 

நந்தி ஒரு பள்ளத்தில் நந்தி மண்டபத்தில் உள்ளார். மழை பெய்ய வேண்டும் என்றால் நந்தி உள்ள பள்ளத்தை நீரால் நிரப்புவர். 

மேலும் பிரகாரத்தில் லக்ஷ்மி நாராயண பெருமாள் மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகள் உள்ளன. 

தல வரலாறு

விருத்திராசுரனை கொன்ற பாவத்தை இந்திரன் இங்கு வந்து தீர்த்து கொண்டான். நாரதரால் சபிக்க பட்ட ரம்பை இங்கே உள்ள பாரிஜாத வனமாகிய நேமதிற்கு வந்து வழி பட்டாள்.ரம்பயை அழைத்து வர 
இந்திரன் ஐராவதம் என்ற யானையை அனுப்பினான்.யானையை 
கண்ட ரம்பை சிவலிங்கத்தை தழுவி கொண்டாள்.ஐராவதம் தன் துதிக்கையால் ரம்பையை இழுத்தது. மேலும் சிவலிங்கத்தை 
பெயர்த்து எடுக்க முயற்சி செய்து மூர்ச்சை அடைந்தது.

இந்திரன் சிவபெருமானை வேண்டி பாப விமோசனம் அளிக்க 
வேண்டினான்.இறைவன் ஐராவதம் மற்றும் ரம்பை ஆகியோருக்கு 
சாப விமோசனம் அளித்தார். அன்று முதல் இறைவனின் பெயர் 
ஐராவதேஸ்வரர். இந்த ஊரை சுற்றி உள்ள பலரின் பெயர் ஐராவதம் 
என்று உள்ளது. (தொல் பொருள் ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் 
இந்த பகுதியை சேர்ந்தவர்.)

ஆலய நேரம்: 

காலை: 10 -11 .30  மாலை: 06 .௦௦ - 07 .௦௦

ஆலய அர்ச்சகர் எண்: கிரிதரன் : 9943756059 

அங்கே எடுத்த புகைப்படங்கள்:










அலங்காரி அம்பாள்:


அலங்காரி அம்பாள்:


ஐராவதேஸ்வரர்: 






Sunday 9 October 2011

திருக்குரக்காவல்

திருக்குரக்குக்கா....

 தேவார வடகரை ஸ்தலங்களில் ஒன்று. ஊர் பெயர் வித்தியாசமானது.தற்போதைய பெயர்  திருக்குரக்காவல் 

இருப்பிடம்: 

இந்த தலம் வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் "இளந்தோப்பு" என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் 
கோயிலையடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்

இறைவன் பெயர்: குந்தளநாதர்

இறைவி பெயர்: குந்தளநாயகி

பதிகம் : திருநாவுக்கரசர் - ௧

சிறப்பு: அனுமன் சன்னதி இங்கு சிறப்பானது.

ஆலய அமைப்பு:

ஆலயத்திற்கு கோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே. கொடிமரம் கிடையாது. பலி பீடம் மற்றும் நந்தி மட்டுமே. வெளி பிரகாரத்தில் அனுமன் சன்னதி உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளனர். சுவாமி சன்னதிக்கு அம்பாள் வலப்புறம் உள்ளார். தல புராண 
ஓவியம் உள்ளது.  வெளி பிரகாரத்தில் முருகன் சன்னதி உள்ளது.
வெளி பிரகாரத்தில் வாழை மரம் உள்ளது. இதுவே தல விருட்சம்.

தல வரலாறு:

ராமேஸ்வரம் கோயிலின் கிளை கதைதான். சீதை மணலால் லிங்கம் அமைத்து பூஜை செய்தாள். அனுமன் காசி நகரிலிருந்து லிங்கம் கொண்டு வந்தார். இரண்டு லிங்கங்களும் ராமேஸ்வரத்தில் உள்ளன. ஆனால் அனுமன் சீதை கொண்டு வந்த லிங்கத்தை தன வாலால் எடுக்க முயன்றார்.

இந்த செய்கை பாவ செயல் ஆதலால் இந்த தலத்திற்கு வந்து சிவா பூஜை செய்தார்.

சிறப்பு:

சிவாலயத்தில் இங்கு அனுமன் சன்னதி மிகவும் சிறப்பு. அமாவாசை தோறும் யாகம் உண்டு. சித்திரை மதத்தில் இரண்டு குரங்குகள் சுவாமி மேல் வில்வ இலைகளை தூவி வழிபடும். 

குறிப்புகள்:

அ. மிகவும் சிறிய கிராமம். நித்திய பூஜைகள் மட்டுமே. திருவிழாக்கள் ஏதும் கிடையாது.

ஆ. தேவைப்படும் பூஜை பொருட்களை வரும் போதே வாங்கி வரவும்.

இ. ஆலய அர்ச்சகர் : ஆபத்சகாய குருக்கள். 04364 -258785   

அர்ச்சகர் ஆலயத்திற்கு அருகிலே உள்ளார். எப்போதும் தரிசனம் செய்யலாம்.

புகைப்படங்கள்:









அனுமன் சன்னதி 


Saturday 8 October 2011

மிளகனூரில் ஒரு நாள்..2

மிளகனூரில் நவராத்திரி ....

மிளகனூரில் பத்து நாள் நவராத்திரி திருவிழா நன்றாக நடந்து வருகிறது. அங்கே எடுத்த புகைப்படங்கள்.

















சீயாத்தமங்கை

நாயன்மார்கள்  வரிசையில் அடுத்து நாம் பார்க்க இருப்பது திருநீலநக்க நாயனார்.

ஊரின் பெயர்: திருச்சாத்தமங்கை அல்லது சீயாத்தமங்கை

இருப்பிடம்:

இந்த தலம் நன்னிலம்-திருமருகல்-நாகூர் சாலையில் உள்ளது.
திருமருகலில் இருந்து நாகூர் செல்லும் சாலையில் 1கி.மீ தூரத்தில்
 கோயில் சீயதமங்கை என்னும் வழிகாட்டி உள்ளது. அது கட்டும் 
பாதையில் சென்றால் ஆலயத்தை அடையலாம்.    நாகப்பட்டினம் நகரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது.நாகை கும்பகோணம் வழி,
நாகை  சன்னாநல்லூர் நடுவே அமைந்து உள்ளது. கோயில்
வரை நல்ல சாலை.

இறைவன் பெயர்: அயவந்தீஸ்வரர்,பிரம்மபுரீஸ்வர்
இறைவி பெயர் : மலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி

பாடல்: திருஞானசம்பந்தர் - 1 . பாடல் பெற்ற தலம் மற்றும் வைப்பு தலமும் கூட...
.

ஆலய அமைப்பு:

ஆலயத்தின் பெயர் அயவந்தி. சுவாமி மற்றும் அம்பாள் தனி தனி ஆலயங்களில் உள்ளனர்.அருமையான கருங்கல் திருப்பணி. நாட்டுக்கோட்டை நகரத்தார் திருப்பணி செய்தது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு தனி தனி கோபுரங்கள். நேர் தரிசனம். சுவாமிக்கு ஐந்து நிலை ராஜகோபுரம்.

விசாலமான பிரகாரம். உட்ப்ரகரத்தில் திருநீலநக்க நாயனார் மற்றும் அவரது மனைவி சிலை உள்ளது.வெளிசுற்றில் பரிவார தெய்வங்கள் உள்ளனர்.அம்பாள் சன்னதி தனி கோயிலாக மதில்களுடன்,கோபுரங்களுடன் அமைந்து உள்ளது.அம்பாள் விநாயகர்,முருகன் ஆகியோரை துவரபாலர்களாக கொண்டு உள்ளார்.

சுவாமி பெயர்: அயவந்தீஸ்வரர்,பிரம்மபுரீஸ்வரர்
அம்பாள் பெயர்: மலர்க்கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி

சிறப்பு : திருநீலநக்க நாயன்மார் அவதார தலம்

நாயன்மார் வரலாறு:  திருநீலநக்கர் அந்தண குலத்தவர். தினமும் ஆலயத்தில் சிவா பூஜை செய்பவர். ஒரு நாள் மனைவியுடன் அவர் ஆலயத்திற்கு சென்றார். அப்போது சுவாமியின் மேல் சிலந்திவலை ஒன்றை கந்தர். நாயனாரின் மனைவி அதை வாயால் ஊதினார்.சுவாமி மேல் எச்சில் பட்டதாக நாயன்மார் கோவம் கொண்டார்.மனைவியை பிரிந்தார். சுவாமி அவரது கனவில் தோன்றி எச்சில் படாத இடங்களில் கொப்பளம் உள்ளதை காண்பித்தார்.தவறை உணர்ந்த நாயனார் மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தார். ஆதலால் சுவாமி சிலை மேல் இன்றும் கொப்பளங்களை காணலாம்.

குறிப்புக்கள்:

1 . மிகவும் அழகான ஆலயம். பெரிய திருக்குளம் உள்ளது. சமீபத்தில் குடமுழுக்கு நடந்துள்ளது.
2 . அர்ச்சகர் ஆலயத்திற்கு வெகு அருகில் உள்ளார்.
3 . அம்பாளை பௌர்ணமி அன்று தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு.

அர்ச்சகர் பெயர்: முத்துகுமாரசுவாமி குருக்கள்
அலைபேசி எண்: 04366 - 270073 , 9842471582