Sunday, 21 August 2011

திருப்பழனம்

திருப்பழனம்...

சப்தஸ்தான தலங்களில் நாம் முதலில் பார்க்க போவது திருப்பழனம்.
திருவையாறு கும்பகோணம் வழியில் சந்திர பரிகார தலமான  திங்களூருக்கு அடுத்து உள்ளது.இந்த தலம் திருவையாறில் இருந்து 4 கி.மீ தூரத்தில்
கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ளது. 

இறைவன் பெயர்: ஆபத்சகாயநாதர் 
இறைவி பெயர்: பெரியநாயகி
பதிகம்: திருஞானசம்பந்தர் - 1,திருநாவுக்கரசர் - 5
தல மரம்: கதலி (வாழை)

ஆலய அமைப்பு:

 *  5 நிலை ராஜா கோபுரம். 3 நிலை உள் கோபுரம்.
 *  சுவாமி மற்றும் அம்பாள் தனி சன்னதிகள் உள்ளன.
 *  மங்கள தீர்த்தம் எனும் குளம் பாழடைந்து கோவில் உள்ளே உள்ளது.
 *  சுவாமி சன்னதி முழுவதும் கருங்கல் திருப்பணி.
 *  சுவாமி சன்னதி கோஷ்டங்கள் அனைத்தும் மிக அழகானவை.

தல வரலாறு:

இந்த தல வரலாறு திருவையாறு தல புராணத்துடன் சேர்ந்தது. சுசரிதன் என்ற சிறுவன் தாய் தந்தையரை இழந்து பல்வேறு தளங்களை தரிசனம் செய்து கொண்டு திருப்பழனம் வந்து தரிசனம் செய்தான்.காலதேவன் இந்த சிறுவனிடம் வந்து இன்னும் ஐந்து நாட்களில் மரணம் அடைவாய் என்கிறார்.

சுசரிதன் தன்னால் சிவா தரிசனம் செய்ய முடியவில்லை என்று வருந்துகிறான்.திருபழனம் இறைவன் சுசரிதனுக்கு ஆசி வழங்கி திருவையாறுக்கு அனுப்புகிறார். அங்கே இறைவன் யமனை வதைத்து சுசரிதனுக்கு நீண்ட ஆயுளை அளிக்கிறார். இந்த யம சம்ஹார  மூர்த்தியே திருவையாறு தெற்கு கோபுர வாயிலில் உள்ள ஆட்கொண்டார் அவார்.

சிறப்பு : திருமறைநாயகி என்னும் அம்பாள் பீட ஸ்தானம்.

குறிப்புகள்:
1.பிரபலமான திங்களூர் ஆலயத்திற்கு அருகில் உள்ளது. இருந்தாலும் இந்த ஆலயத்திற்கு கூட்டம் குறைவுதான்.
2.நாங்கள் சென்ற போது வேறு யாரும் இல்லை.பூஜைகள் குறைவுதான்.
3.நண்பர்கள் சீழும் போது ஆலயத்திற்கு எண்ணெய், சூடம், திரி போன்றவைகளை கொண்டு செல்லவும்.
4.முடிந்தவர்கள் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்த்ரம் வாங்கி கொடுக்கவும்.
5.தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் வரிசையில் இந்த இடமும் ஒரு சிற்ப களஞ்சியம். புகைப்படங்கள் தனியாக ஒரு பதிவில் வரும்.

ஆலய அர்ச்சகர்: ராஜு குருக்கள். தொலைபேசி  எண்: 04362 326668

1 comment: